×

கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்ைத ரத்து செய்ய கோரி காத்திருப்பு போராட்டம்

கரூர், ஆக. 26: கரூரில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட ஆலோசகர் கண்ணன் துவக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.சிபிஎஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஓய்வுபெற்ற, இறந்த, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

The post கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்ைத ரத்து செய்ய கோரி காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு